ADDED : பிப் 10, 2024 04:39 AM
ராமநாதபுரம்: 1330 திருக்குறளையும் ஒப்புவிக்கும் மாணவர்களுக்கு திருக்குறள் முற்றோதல் பாராட்டுப் பரிசு ரூ.15 ஆயிரம், சான்றிதழ் வழங்கப்படும்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளி மாணவர்கள் இப்போட்டியில் பங்கேற்கலாம். ஏற்கனவே பரிசு பெற்றவர்கள் மீண்டும் பங்கேற்க கூடாது. மாணவர்கள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் விண்ணப்பப் படிவத்தை பெற்றுக் கொள்ளலாம். அல்லது tamilvalarchithrurai.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் பிப்.14. விபரங்களுக்கு 04567--232 130 ல் தொடர்பு கொள்ளலாம்.