Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/பாதாள சாக்கடை பிரச்னைக்கு தீர்வு இல்லை; நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர் வெளிநடப்பு

பாதாள சாக்கடை பிரச்னைக்கு தீர்வு இல்லை; நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர் வெளிநடப்பு

பாதாள சாக்கடை பிரச்னைக்கு தீர்வு இல்லை; நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர் வெளிநடப்பு

பாதாள சாக்கடை பிரச்னைக்கு தீர்வு இல்லை; நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர் வெளிநடப்பு

ADDED : டிச 02, 2025 05:39 AM


Google News
Latest Tamil News
ராமநாதபுரம்: ராமநாதபுரம் நகராட்சி அவசரக் கூட்டத்தில் பாதாள சாக்கடை பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணாமல் பராமரிப்பு பெயரில் ரூ.பல லட்சம் செலவை கண்டித்து பா.ஜ., கவுன்சிலர் குமார் வெளிநடப்பு செய்தார். ராமநாதபுரம் நகராட்சி கூட்ட அரங்கத்தில் அவசரக் கூட்டம் நடந்தது.

தலைவர் கார்மேகம் தலைமை வகித்தார். கமிஷனர் அஜிதா பர்வின் முன்னிலை வகித்தார். இதில் துாய்மை பணியாளர்களுக்கு ஒரு வேளை உணவு வழங்கும் திட்டத்திற்கு தனியார்வசம் ஒப்படைப்பது மற்றும் நகரில் பாதாள சாக்கடை பராமரிப்பு பணியில் ஈடுபடும் தற்காலிக பணியாளர்கள் ஒப்பந்த காலத்தை இரு மாதங்கள் நீட்டிப்பது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

அப்போது நடந்த விவாத்தின் போது பா.ஜ., கவுன்சிலர் குமார் கூறுகையில், அஜண்டாவில் எத்தனை துாய்மை பணியாளர்களுக்கு, எவ்வளவு செலவில் உணவு வழங்கப்பட உள்ளது. அரசு நிதியா அல்லது நகராட்சி நிதியா என்ற விபரங்கள் எதுவும் இல்லை.

மேலும் நகரில் பாதாள சாக்கடை பிரச்னை தீர்வு காணப்படாமல் கழிவுநீர் பல இடங்களில் ஓடுகிறது. கேள்வி கேட்டும் மக்களுக்கு பதிலளிக்க முடியவில்லை என்றார்.

அரசு உத்தரவின் படி துாய்மைப் பணியாளர்களுக்கு உணவு வழங்க நகராட்சி நிதி ஒதுக்கப்பட்டு 287 பேருக்கு வழங்கப்பட உள்ளது.

பாதாள சாக்கடை புதிய குழாய் பதிக்கும் பணி முடியும் தருவாயில் உள்ளது. அதன் பிறகு கழிவுநீர் பிரச்னை வராது என தலைவர் கார்மேகம் தெரிவித்தார். இந்த பதிலில் திருப்தி அடையாத கவுன்சிலர் குமார் நகராட்சி நிர்வாகம் அலட்சியமாக செயல்படுகிறது எனக்கூறியபடி, அவரசக் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us