Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ வராகி அம்மன் கோயிலில் தேய்பிறை பஞ்சமி

வராகி அம்மன் கோயிலில் தேய்பிறை பஞ்சமி

வராகி அம்மன் கோயிலில் தேய்பிறை பஞ்சமி

வராகி அம்மன் கோயிலில் தேய்பிறை பஞ்சமி

ADDED : ஜூன் 17, 2025 06:36 AM


Google News
Latest Tamil News
உத்தரகோசமங்கை; உத்தரகோசமங்கை வராகி அம்மன் கோயிலில் வளர்பிறை மற்றும் தேய்பிறை பஞ்சமி பூஜை கோலாகலமாக நடந்து வருகிறது. நேற்று தேய்பிறை பஞ்சமியை முன்னிட்டு காலை 10:00 மணிக்கு மூலவர் வராகி அம்மனுக்கு 16 வகை அபிஷேகம், அலங்கார தீபாராதனைகள் நடந்தது.

தங்கக் கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கோயில் வளாகத்தில் உள்ள அம்மி கல்லில் ஏராளமான பெண்கள் பச்சை விரலி மஞ்சள் அரைத்து உருண்டையாக பிடித்து நேர்த்திக்கடன் நிறைவேற்றினர்.

*கமுதி -மதுரை ரோட்டில் எட்டுக்கண் பாலம் ஆதி வராகி அம்மன் கோயிலில் ஆனி மாத தேய்பிறை பஞ்சமி திதி தினத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. வராஹி அம்மனுக்கு அபிஷேகம் தீபாராதனை நடந்தது. பெண்கள் வாழை இலையில் பச்சரிசி வைத்து நெய் தீபம் ஏற்றி வழிபட்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us