ADDED : ஜன 05, 2024 05:49 AM

திருவாடானை, : திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் உள்ள காலபைரவர் சன்னதியில் தேய்பிறை அஷ்டமி பூஜை நடந்தது. சிறப்பு அபிேஷகம், ஆராதனைக்கு பின் பைரவர் வெள்ளி அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க நடந்த தீபாராதனையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. சம்ஹார பைரவர் குழுவினர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.