ADDED : பிப் 25, 2024 05:55 AM
உச்சிபுளி : ராமநாதபுரம் அருகே உச்சிபுளி மரவெட்டி வலசையைச் சேர்ந்த முத்துசாமி மனைவி பாக்கியஜோதி.
இவர்நேற்று முன்தினம் வீட்டை பூட்டி விட்டு வயல் அறுவடை பணிக்கு சென்றார். அப்போது பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 11 கிராம் தங்க நகை, ரூ.1200 பணத்தை மர்ம நபர் திருடிச்சென்றார்.
உச்சிபுளி போலீசார் விசாரணையில் மரவெட்டி வலசையைச் சேர்ந்த மணி மகன் புளுபிரசாத் 24, திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. அவரை உச்சிபுளி போலீசார் கைது செய்தனர்.