கீழக்கரை : கீழக்கரை நகராட்சி கமிஷனர் ரெங்கநாயகி ஜூன் 30 ஓய்வு பெற இருந்த நிலையில் 3 நாட்களுக்கு முன் திடீரென சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
பரமக்குடி நகராட்சி கமிஷனர் முத்துச்சாமி கூடுதல் பொறுப்பாக கீழக்கரை நகராட்சிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். நகராட்சி தலைவர் செஹானாஸ் ஆபிதா, துணை தலைவர் ஹமீது சுல்தான், அலுவலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.