Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ வறட்சியால் பெரிய கண்மாய் நீர் வேகமாக குறைவதால் கோடை விவசாயிகள் கவலை

வறட்சியால் பெரிய கண்மாய் நீர் வேகமாக குறைவதால் கோடை விவசாயிகள் கவலை

வறட்சியால் பெரிய கண்மாய் நீர் வேகமாக குறைவதால் கோடை விவசாயிகள் கவலை

வறட்சியால் பெரிய கண்மாய் நீர் வேகமாக குறைவதால் கோடை விவசாயிகள் கவலை

ADDED : மே 11, 2025 07:05 AM


Google News
ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய் நீர் வறட்சியால் வேகமாக குறைந்து வருவதால் கோடை நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய் பாசன பகுதியான இருதயபுரம், பெத்தார் தேவன் கோட்டை, நெடும்புலிக் கோட்டை, பிச்சனார் கோட்டை, புலி வீர தேவன் கோட்டை, பொன்னால கோட்டை, செட்டிய மடை, புல்லமடை, மேலமடை உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் அதிகளவில் விவசாயிகள் கோடை நெல் சாகுபடி செய்துள்ளனர்.

பெரிய கண்மாயில் தேங்கியுள்ள தண்ணீரை பயன்படுத்தி கோடை நெல் சாகுபடி செய்துள்ள நிலையில் தற்போது தொடர்ந்து நிலவும் கடும் வறட்சியால் தண்ணீர் வேகமாக குறைந்து வருகிறது. மேலும், கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக மழைப்பொழிவு இல்லாததால் பாசன மடைகள் மூலம் கோடை சாகுபடிக்கு கண்மாய் நீரை பாய்ச்ச வேண்டிய கட்டாயத்தில் விவசாயிகள் உள்ளனர்.

இந்நிலையில், தண்ணீர் வேகமாக குறைந்து வருவதாலும், மழையின்றி வறட்சி நிலவுவதாலும், கோடை நெல் விவசாயத்திற்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us