ADDED : பிப் 10, 2024 04:44 AM
கமுதி: அபிராமம் பள்ளபச்சேரி வீரபாண்டி 40.
திருமணம் முடிந்து குடும்ப பிரச்னையில் தனியாக வசித்து வந்தார். அபிராமம்- வீரசோழன் சாலை பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள 115 அடி உயர அலைபேசி டவரில் ஏறி தற்கொலைக்கு முயன்றார். போலீசார் சொல்லியும் வீரபாண்டி கேட்காமல் வேட்டியில் டவரின் உச்சியில் துாக்கிட்டு தற்கொலை செய்தார். தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் உடலை மீட்டனர். போலீசார் விசாரிக்கின்றனர்.