Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ பஸ் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம்: மாணவர் உயிருக்கு ஆபத்து

பஸ் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம்: மாணவர் உயிருக்கு ஆபத்து

பஸ் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம்: மாணவர் உயிருக்கு ஆபத்து

பஸ் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம்: மாணவர் உயிருக்கு ஆபத்து

ADDED : ஜூன் 25, 2025 08:51 AM


Google News
Latest Tamil News
ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் பள்ளி, கல்லுாரி, அலுவலகம் திறப்பு, முடியும் நேரத்தில் போதிய பஸ்கள் இல்லாததால் உயிருக்கு ஆபத்தான முறையில் மாணவர்கள் பஸ் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் செய்வது வாடிக்கையாகியுள்ளது.

மாவட்ட தலைநகரமான ராமநாதபுரத்தில் பள்ளி, கல்லுாரி, அலுவலகங்களில் உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்கள், கிராமங்களில் இருந்து ஏராளமானவர்கள் படிக்க, பணிபுரிய தினமும் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் பள்ளி, அலுவலகம் திறப்பு, முடியும் நேரத்தில் போதிய பஸ்கள் இல்லாததால் ஆபத்தை உணராமல் மாணவர்கள் பஸ் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்வது வாடிக்கையாகியுள்ளது.

இவ்விஷயத்தில் அலட்சியம் காட்டாமல் பள்ளி, கல்லுாரி, அலுவலகம் செயல்படும், முடியும் நேரங்களில் கூடுதலாக அரசு பஸ்களை இயக்க போக்குவரத்துதுறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us