Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ தபால் நிலையங்களில்  விபத்து  காப்பீட்டு திட்ட சிறப்பு முகாம் 

தபால் நிலையங்களில்  விபத்து  காப்பீட்டு திட்ட சிறப்பு முகாம் 

தபால் நிலையங்களில்  விபத்து  காப்பீட்டு திட்ட சிறப்பு முகாம் 

தபால் நிலையங்களில்  விபத்து  காப்பீட்டு திட்ட சிறப்பு முகாம் 

ADDED : ஜூன் 17, 2025 11:17 PM


Google News
ராமநாதபுரம்: ராமநாதபுரம் கோட்டத்தில் உள்ள தபால் நிலையங்களில் விபத்து காப்பீட்டுத் திட்டங்களில் மக்கள் இணைவதற்காக சிறப்பு முகாம்கள் ஜூன் 30 வரை நடக்கிறது.

ராமநாதபுரம் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் தீத்தாரப்பன் கூறியிருப்பதாவது:

இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கி பொது காப்பீடு நிறுவனங்களுடன் இணைந்து ஆண்டுக்கு ரூ.500 முதல் ரூ.700 பிரீமியத்தில் ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்து, மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.

இதில் ஆண்டுக்கு ஒரு முறை உடல் பரிசோதனை செய்யும் வசதி, தொலைபேசியில் மருத்துவ ஆலோசனைகள் பெறலாம். விபத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நாட்களுக்கு தினமும்ரூ.1000 வீதம் 15 நாட்களுக்கு வழங்கப்படும். 'சூப்பர் டாப் அப்'திட்டத்தில் ரூ.2000 பிரீமியம் கட்டி ரூ.15 லட்சத்திற்கான கூடுதல் மருத்துவ காப்பீடு பெறலாம்.

இதற்கான சிறப்பு முகாம்கள் ஜூன் 30 வரை அனைத்து தபால் அலுவலகங்களிலும் நடக்கிறது. 18முதல் 65 வயது வரை உள்ளவர்கள் இந்தக் காப்பீடு திட்டத்தில் சேரலாம்.

மேலும் விபரங்களுக்கு95028 46948, 93428 71525 என்ற அலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us