ADDED : பிப் 10, 2024 04:45 AM
கமுதி: முதுகுளத்துார் மேலக்கொடுமலுார் குரூப் விளக்கனேந்தல் கிராமம் கண்மாய் பகுதியில் எலும்புக் கூடாக ஆண் சடலம் கிடந்தது.
அபிராமம் போலீசார் கமுதி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். விசாரணையில் பெருங்கருணை கருப்பையா 65, என்பவரை ஜன.30 முதல் காணவில்லை என்று வழக்கு பதிந்துள்ளனர். அது கருப்பையா என்பதை போலீசார் உறுதி செய்துள்ளனர்.