ADDED : செப் 29, 2025 05:28 AM
திருவாடானை திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் முருகன் சன்னதி, தொண்டி அருகே நம்புதாளை பாலமுருகன், ஆதியூர் முருகன் கோயில்களில் புரட்டாசி சஷ்டியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.
வள்ளி, தெய்வானையுடன் முருகன் மலர் மாலைகளால் அலங்கரிங்கபட்டு காட்சியளித்தார். அதனை தொடர்ந்து நடந்த தீபாரதனையில் பக்தர்கள் கலந்து கொண்டு, முருகன் பக்தி பாடல்களை பாடினர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கபட்டது.


