ADDED : ஜன 29, 2024 05:31 AM
ராமநாதபுரம்: -ராமநாதபுரம் அருகேயுள்ள காட்டூரணி யாதவர் கோயில் தெருவை சேர்ந்தவர் முருகன் மகன்காமேஷ்வரன் 16. இவர் ராமநாதபுரத்தில் உள்ள தனியார்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார்.
இவரதுதாத்தாவிற்கு திதி கொடுப்பதற்காக குடும்பத்தினர் திருப்புல்லாணி சென்றனர். தானும் வருவதாக காமேஷ்வரன் தெரிவித்துள்ளார். பெற்றோர்கள் டியூஷன் செல்ல வேண்டும் என்பதால் வீட்டில் விட்டு சென்றனர். மனம் உடைந்த காமேஷ்வரன் வீட்டில் இருந்த மின் விசிறியில் துாக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார். கேணிக்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.