Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ கிர்ணி பழங்கள் விற்பனை ஜோர்

கிர்ணி பழங்கள் விற்பனை ஜோர்

கிர்ணி பழங்கள் விற்பனை ஜோர்

கிர்ணி பழங்கள் விற்பனை ஜோர்

ADDED : மார் 18, 2025 11:05 PM


Google News
Latest Tamil News
ராமநாதபுரம் : வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் ராமநாதபுரத்தில் திண்டிவனத்தில் இருந்து கிர்ணி (முலாம்) பழங்கள் கிலோ ரூ.50க்கு விற்கப்படுகிறது. மக்கள் ஆர்வத்துடன் வாங்குகின்றனர்.

ராமநாதபுரத்தில் வெயிலின் தாக்கம் காரணமாக மதியம், இரவில் வெப்பசலனத்தால் மக்கள் சிரமப்படுகின்றனர். இதனால் தர்பூசணி, பப்பாளி, திராட்சை, ஆரஞ்ச் உள்ளிட்ட பழங்கள் ஜூஸ், சர்பத், ஜிகர்தண்டா, ஐஸ்கிரீம் ஆகிய குளிர்பானங்களின் விற்னை அதிகரித்துள்ளது.

தற்போது திண்டிவனத்தில் இருந்து ராமநாதபுரத்திற்கு கிர்ணி பழங்கள் விற்பனைக்கு வந்துள்ளன. கிலோ ரூ.50க்கு விற்கப்படுகிறது. உடலில் உஷ்ணத்தை குறைக்கும் மருத்துவ குணமிக்க பழம் என்பதால் மக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்வதாக வியாபாரிகள் கூறினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us