Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ கடற்கரையோர மாவட்டங்களில்'சாகர் கவாச்' பாதுகாப்பு ஒத்திகை

கடற்கரையோர மாவட்டங்களில்'சாகர் கவாச்' பாதுகாப்பு ஒத்திகை

கடற்கரையோர மாவட்டங்களில்'சாகர் கவாச்' பாதுகாப்பு ஒத்திகை

கடற்கரையோர மாவட்டங்களில்'சாகர் கவாச்' பாதுகாப்பு ஒத்திகை

ADDED : ஜூன் 26, 2025 02:44 AM


Google News
Latest Tamil News
ராமநாதபுரம்,:- சென்னை முதல் கன்னியாகுமரி வரையிலான கடல் பகுதியில் பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில் 'சாகர் கவாச்' என்ற பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. இந்தியாவில் 2008 ல் கடல் வழியாக மும்பையின் நுழைந்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் பொது மக்கள், போலீசார் கொல்லப்பட்டனர். இதன் காரணமாக கடலோர பாதுகாப்பை பலப்படுத்தும்விதமாக' சாகர் கவாச் 'என்றபாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

அதன்படி நேற்று காலை 7:00 முதல் இன்று இரவு 7:00 மணி வரை நடக்கும் இந்நிகழ்ச்சியில் கடற்படை, கடலோர காவல் படை, கடலோர பாதுகாப்பு குழுமம், கடலோரப்பகுதிகளில் உள்ள போலீசார் பங்கேற்றுள்ளனர்.

போலீசாரே பயங்கரவாதிகள் போல மாறி கடற்கரைப்பகுதியில் ஊடுருவ முயற்சித்தனர். ராமேஸ்வரத்தில் 5 பேரையும், தேவிபட்டினத்தில் இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த ஆயுதங்கள், டம்மி வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த நிகழ்ச்சி கடற்கரையோர 14 மாவட்டங்களிலும் நடந்தது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us