Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ ரூ.6 கோடி கஞ்சா இலங்கையில் பறிமுதல்

ரூ.6 கோடி கஞ்சா இலங்கையில் பறிமுதல்

ரூ.6 கோடி கஞ்சா இலங்கையில் பறிமுதல்

ரூ.6 கோடி கஞ்சா இலங்கையில் பறிமுதல்

ADDED : செப் 19, 2025 02:36 AM


Google News
Latest Tamil News
ராமேஸ்வரம்:இலங்கை யாழ்ப்பாணத்தில் ரூ.6 கோடி கஞ்சாவை கடற்படை வீரர்கள் பறிமுதல் செய்தனர்.

இலங்கை யாழ்ப்பாணம் அருகே வெற்றிலைகேணி கடலோரத்தில் இலங்கை கடற்படை வீரர்கள் ரோந்து சுற்றினர். அப்போது சந்தேகத்திற்குரிய இலங்கை பைபர் கிளாஸ் படகை விரட்டிச் சென்று மடக்கிய போது அதில் இருந்த கடத்தல்காரர்கள் இருவர் கடலில் குதித்து தப்பி ஓடினர். படகை சோதனையிட்டதில் 240 கிலோ கஞ்சா பார்சல்கள் இருந்தது. இதன் மதிப்பு ரூ.6 கோடி.

மிதந்த கஞ்சா:


யாழ்ப்பாணம் மாமுனை கடற்கரையில் மிதந்து வந்த ஒரு மூடையை கடற்படை வீரர்கள் பறிமுதல் செய்தனர். அதில் 15 பார்சல்களில் 33 கிலோ கஞ்சா இருந்தன. இந்த பார்சல்கள்நாகை, வேதாரண்யம் கடற்கரையில் இருந்து கடத்தப்பட்டது தெரியவந்துள்ளது. இங்கிருந்து அனுப்பியவர்கள் யார் என தமிழக போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us