Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ உத்தரகோசமங்கை கண்மாயில் சீமை கருவேல மரங்கள் ஆக்கிரமிப்பு வரத்துக்கால்வாய்களை சீரமைக்க கோரிக்கை

உத்தரகோசமங்கை கண்மாயில் சீமை கருவேல மரங்கள் ஆக்கிரமிப்பு வரத்துக்கால்வாய்களை சீரமைக்க கோரிக்கை

உத்தரகோசமங்கை கண்மாயில் சீமை கருவேல மரங்கள் ஆக்கிரமிப்பு வரத்துக்கால்வாய்களை சீரமைக்க கோரிக்கை

உத்தரகோசமங்கை கண்மாயில் சீமை கருவேல மரங்கள் ஆக்கிரமிப்பு வரத்துக்கால்வாய்களை சீரமைக்க கோரிக்கை

ADDED : ஜூன் 01, 2025 11:09 PM


Google News
Latest Tamil News
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை பெரிய பாசன கண்மாயில் சீமை கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளது. அவற்றை அகற்றி வரத்துக்கால்வாய்களை சீரமைக்க வேண்டும்.

உத்தரகோசமங்கை பாசன கண்மாய் 400 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவை கொண்டதாகும். பரமக்குடி பகுதியில் இருந்து வரக்கூடிய வைகை ஆற்று நீர் உத்தரகோசமங்கை, களரி உள்ளிட்ட கண்மாய்களுக்கு செல்கிறது.

உத்தரகோசமங்கை கண்மாயின் பெருவாரியான பகுதிகள் சீமை கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்து காணப்படுவதால் ஒவ்வொரு மழை காலங்களிலும் தண்ணீர் தேக்கினாலும் வருடம் முழுவதும் சேமிக்க இயலாதவாறு குறைவான கொள்ளளவில் சேகரமாகிறது.

2020ம் ஆண்டில் உத்தரகோசமங்கை கண்மாய் குடிமராமத்து பணி செய்யப்பட்டதில் பக்கவாட்டு பகுதியில் தோண்டப்பட்ட இடங்களில் பருவமழை மற்றும் கோடை மலையின் காரணமாக தண்ணீர் தேங்கியுகிறது.

நடுப்பகுதி முழுவதும் மேடாக இருப்பதால் தண்ணீர் சேமிக்க வழி இன்றி சீமை கருவேல மரங்கள் மரங்கள் வளர்ந்துள்ளன.

இக்கண்மாய் பாசனநீரில் சுற்றுவட்டார கிராமங்களுக்கு நெல், மிளகாய், பருத்தி உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறது.

எனவே பொதுப்பணித்துறை கண்மாய் பாசன அதிகாரிகள் கோடைகாலத்தில் கண்மாயின் தடுப்பணை மற்றும் மதகு, வரத்துக்கால்வாய் உள்ளிட்டவை முறையாக மராமத்து பணிகளை செய்வதற்கான செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us