Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ செப்.,13ல் பொதுவினியோக திட்ட குறை தீர்க்கும் முகாம்

செப்.,13ல் பொதுவினியோக திட்ட குறை தீர்க்கும் முகாம்

செப்.,13ல் பொதுவினியோக திட்ட குறை தீர்க்கும் முகாம்

செப்.,13ல் பொதுவினியோக திட்ட குறை தீர்க்கும் முகாம்

ADDED : செப் 11, 2025 06:55 AM


Google News
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் தாலுகா வாரியாக ஒரு கிராமத்தில் செப்.,13ல் (நாளை மறு நாள்) பொது வினியோகத் திட்ட குறைதீர்க்கும் முகாம் நடக்கிறது.

மாதந்தோறும் 2வது சனிக்கிழமை சூழற்சி முறையில் மாவட்டத்தின் அனைத்து தாலுகாக்களிலும் ஒரு கிராமத்தில் பொது வினியோகத்திட்ட குறைதீர் முகாம் நடக்கிறது.

இதன்படி செப்.,13ல் கீழ்கண்ட இடங்களில் காலை 10:00 மணிக்கு பொதுவினியோக திட்ட குறை தீர்க்கும் முகாம் நடக்கிறது.

ராமநாதபுரம் அருகே அத்தியூத்து, திருவெற்றியூர், பார்த்திபனுார் அருகே பொதுவக்குடி, முதுகுளத்துார் தாலுகா மேலக்கொடுமலுார் அருகே கே.ஆர்.பட்டணம், கமுதி தாலுகா கோவிலாங்குளம் அருகே காத்தனேந்தல், உத்திரகோசமங்கை அருகே மல்லல், ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா ஆனந்துார் அருகே செங்குடி ஆகிய இடங்களில் அப்பகுதியுள்ள ரேஷன் கடைகளிலும், ராமேஸ்வரம் தாலுகாவில் பாம்பன் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டடம் மற்றும் கடலாடி தாலுகா கருங்குளம் இ-சேவை மையத்திலும் குறைதீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது. இதில் மின்னணு ரேஷன் கார்டு விண்ணப்பம் செய்தல், பெயர் சேர்த்தல், பிழைத்திருத்தம், போட்டோ பதிவேற்றம், முகவரி மாற்றம், அலைபேசி எண் பதிவு செய்தல், புதிய ரேஷன் கார்டு, கடைக்கு வர முடியாத மூத்தக்குடி மக்களுக்கான அங்கீகாரச்சான்று ஆகிய மனுக்கள் வழங்கலாம்.

ரேஷன் பொருட்கள் வினியோகம் தொடர்பான குறைகளை பொதுமக்கள் தெரிவிக்கலாம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us