Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா 

போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா 

போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா 

போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா 

ADDED : ஜூன் 30, 2025 04:57 AM


Google News
ராமநாதபுரம் : ராமநாதபுரம் அருகேயுள்ள சம்பை உயர்நிலைப்பள்ளியில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.

போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சம்பை உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடந்தது. போட்டிகளுக்கு தலைமையாசிரியர் ரத்தினவேலு தலைமை வகித்தார். விழிப்புணர்வு வாசகம் எழுதும் போட்டியில் மாணவர்கள் மாகித்கண்ணன், பரமேஸ்வரன், முகிலன், சதிகஷா, ஆகியோரும், பேச்சு போட்டியில் கிருத்திகா, குழு நாடகத்தில் மெருன் ஹவுஸ்சும், உடல், உள்ளம் சார்ந்த குழு விளையாட்டுகளில் பிங்க் ஹவுஸ்சும் வெற்றி பெற்றனர்.

தேவிபட்டினம் எஸ்.எஸ்.ஐ., பாலமுருகன் மாணவர்களுக்கு பரிசு வழங்கினார். ஆசிரியர்கள், பெற்றோர்கள், பள்ளி மேலாண்மை குழுவினர் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us