Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ நயினார்கோவில், போகலுாரில் பிரதமரின் கவுரவ நிதி முகாம் விவசாயிகளுக்கு அழைப்பு

நயினார்கோவில், போகலுாரில் பிரதமரின் கவுரவ நிதி முகாம் விவசாயிகளுக்கு அழைப்பு

நயினார்கோவில், போகலுாரில் பிரதமரின் கவுரவ நிதி முகாம் விவசாயிகளுக்கு அழைப்பு

நயினார்கோவில், போகலுாரில் பிரதமரின் கவுரவ நிதி முகாம் விவசாயிகளுக்கு அழைப்பு

ADDED : மே 18, 2025 10:17 PM


Google News
நயினார்கோவில் : பரமக்குடி அருகே நயினார்கோவில் மற்றும் போகலுார் பகுதி விவசாயிகள் பி.எம்.கிசான் திட்டத்தில் கவுரவ நிதி பெற சிறப்பு முகாம் நடக்கிறது.

பிரதமரின் கவுரவ நிதி திட்டத்தில் தகுதி உடைய அனைத்து விவசாயிகளும் மே 31 வரை வட்டார வேளாண் விரிவாக்க மையம், பொது சேவை மையம், இந்திய அஞ்சல் வங்கி ஆகிய இடங்களில் சென்று பயன் பெறலாம். நில உடமை பதிவேற்றம், இ.கே.ஒய்.சி. பதிவேற்றம் செய்யாத விவசாயிகள் பொது சேவை மையம், வேளாண் விரிவாக்க மையத்தை அணுகலாம்.

நில உடமை பதிவேற்றம் செய்த விவசாயிகளுக்கு மட்டுமே வரும் ஜூன் மாதத்தில் 20வது தவணை பணம் விடுவிக்கப்படும்.

மேலும் வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்காத விவசாயிகள் உடன் இணைக்க வேண்டும்.

2019 பிப்., 1ல் நிலப்பட்டா வைத்திருக்கும் தகுதி உடைய, பதிவு செய்யாத விவசாயிகள் அனைத்து ஆவணங்களையும் பயன்படுத்தி பதிவு செய்து கொள்ளலாம், என நயினார்கோவில் வேளாண்மை உதவி இயக்குநர் பானுபிரகாஷ் தெரிவித்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us