/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/கச்சத்தீவு விழாவுக்கு செல்ல தடை ராமேஸ்வரத்தில் காத்திருந்த போலீசார்கச்சத்தீவு விழாவுக்கு செல்ல தடை ராமேஸ்வரத்தில் காத்திருந்த போலீசார்
கச்சத்தீவு விழாவுக்கு செல்ல தடை ராமேஸ்வரத்தில் காத்திருந்த போலீசார்
கச்சத்தீவு விழாவுக்கு செல்ல தடை ராமேஸ்வரத்தில் காத்திருந்த போலீசார்
கச்சத்தீவு விழாவுக்கு செல்ல தடை ராமேஸ்வரத்தில் காத்திருந்த போலீசார்
ADDED : பிப் 24, 2024 02:09 AM

ராமேஸ்வரம்,:-கச்சதீவு திருவிழாவுக்கு அரசு தடை விதித்த நிலையில் அத்துமீறி செல்லும் மீனவர்களை கைது செய்ய ராமேஸ்வரத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
இலங்கையில் 5 மீனவர்களுக்கு சிறை தண்டனை விதித்ததை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்து பிப்.,23, 24ல் நடக்கும் கச்சத்தீவு விழாவை புறக்கணித்தனர்.
இதையடுத்து பாதுகாப்பு கருதி மாவட்ட நிர்வாகம் கச்சதீவு விழாவுக்கு செல்வோருக்கு தடை விதித்தது.
ஆனால் தடையை மீறி கச்சதீவுக்கு செல்வோம் என நாட்டுப்படகு மீனவர்கள் சிலர் தெரிவித்தனர்.
இதனால் நேற்று காலை முதல் ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மாவட்ட போலீசார் மற்றும் துாத்துக்குடி, ராமநாதபுரம், நாகை மாவட்ட கடலோர பாதுகாப்பு படையினர் என 500 போலீசார் ராமேஸ்வரம் துறைமுகம் வீதி, படகுகள் நிறுத்தும் பாலம், ஓலைக்குடா, பாம்பன் கடற்கரையில் குவிக்கப்பட்டனர்.
இந்நிலையில் தடையை மீறி கச்சிதீவு திருவிழாவிற்கு ஒருவர் கூட செல்லவில்லை.
அதற்கான முயற்சியும் எடுக்கவில்லை. தடையை மீறி மீனவர்கள் வருவார்கள் என எதிர்பார்த்து கடற்கரையில் வெகு நேரம் காத்திருந்த போலீசார் நேற்று மதியம் 3:00 மணிக்கு பின் ஏமாற்றத்துடன் திரும்பினர்.