Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/மாணவர்களுக்கு ஜன.9,10ல் கவிதை, கட்டுரைப்போட்டி

மாணவர்களுக்கு ஜன.9,10ல் கவிதை, கட்டுரைப்போட்டி

மாணவர்களுக்கு ஜன.9,10ல் கவிதை, கட்டுரைப்போட்டி

மாணவர்களுக்கு ஜன.9,10ல் கவிதை, கட்டுரைப்போட்டி

ADDED : ஜன 05, 2024 05:15 AM


Google News
ராமநாதபுரம் : தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் பிளஸ் 1, 2 மாணவர்களுக்கு ஜன.9ல், கல்லுாரி மாணவர்களுக்கு ஜன. 10ல் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள முகமது சதக் தஸ்தகீர் கல்வியியல் கல்லுாரியில் நடைபெற உள்ளது.

போட்டிகளில் பங்கேற்க விருப்பமுள்ள மாணவர்கள் படிவத்தை பூர்த்தி செய்து பள்ளி தலைமையாசிரியர், கல்லுாரி முதல்வர், துறைத்தலைவரின் பரிந்துரையுடன் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநரிடம் வழங்க வேண்டும்.

ஒவ்வொரு பள்ளி, கல்லுாரியில் இருந்து கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் தலா ஒருவர் வீதம் 3 மாணவர்கள் மட்டும் கலந்து கொள்ளலாம். தலைப்புகள் போட்டி துவங்குவதற்கு முன் அறிவிக்கப்படும்.

முதல் பரிசு ரூ.10 ஆயிரம், இரண்டாவது பரிசு ரூ.7000, மூன்றாம் பரிசு ரூ.5000 வீதம் ஒவ்வொரு போட்டிக்கும் காசோலையாக வழங்கப்படும் என கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us