Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ பாம்பன் மீனவர்கள் 14 பேருக்கு 'பைன்'

பாம்பன் மீனவர்கள் 14 பேருக்கு 'பைன்'

பாம்பன் மீனவர்கள் 14 பேருக்கு 'பைன்'

பாம்பன் மீனவர்கள் 14 பேருக்கு 'பைன்'

ADDED : மார் 21, 2025 11:41 PM


Google News
ராமேஸ்வரம்; இலங்கை சிறையில் உள்ள பாம்பன் மீனவர்கள் 14 பேருக்கு தலா ரூ.4.50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

மார்ச் 6ல் ராமேஸ்வரம் அருகே பாம்பனில் இருந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்களின் ஒரு படகை பறிமுதல் செய்து, அதில் இருந்த 14 மீனவர்களை இலங்கை கடற்படை வீரர்கள் கைது செய்தனர். 14 பேரும் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர். கோர்ட் வாய்தா நாளான நேற்று மீனவர்களை மன்னார் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர்.

இவ்வழக்கை விசாரித்த நீதிபதி, மீனவர்கள் எல்லை தாண்டி வந்து தடை செய்த வலையில் மீன்பிடித்தது உறுதியானதால் 14 பேருக்கும் தலா ரூ.4.50 லட்சம் (இந்திய மதிப்பில் ரூ.1.30 லட்சம்) அபராதம் விதித்து விடுதலை செய்வதாகவும், அபராதத்தை கட்ட தவறினால் 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார். இதனையடுத்து மீனவர்களை மீண்டும் வவுனியா சிறையில் போலீசார் அடைத்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us