/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/இந்திரா நகரில் பஸ் ஸ்டாப்பில் நிழற்குடையின்றி மக்கள் அவதி நிழற்குடையின்றி மக்கள் அவதிஇந்திரா நகரில் பஸ் ஸ்டாப்பில் நிழற்குடையின்றி மக்கள் அவதி நிழற்குடையின்றி மக்கள் அவதி
இந்திரா நகரில் பஸ் ஸ்டாப்பில் நிழற்குடையின்றி மக்கள் அவதி நிழற்குடையின்றி மக்கள் அவதி
இந்திரா நகரில் பஸ் ஸ்டாப்பில் நிழற்குடையின்றி மக்கள் அவதி நிழற்குடையின்றி மக்கள் அவதி
இந்திரா நகரில் பஸ் ஸ்டாப்பில் நிழற்குடையின்றி மக்கள் அவதி நிழற்குடையின்றி மக்கள் அவதி
ADDED : ஜன 04, 2024 02:02 AM
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே திருச்சி- ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை இந்திரா நகர் அமைந்துள்ளது. கிழக்கு கடற்கரை சாலை உப்பூருக்கு செல்லும் பிரிவு சாலையும், இந்திரா நகரில் பிரிவடைகின்றன.
மேலும் யூனியன் அலுவலகம், கால்நடை மருத்துவமனை வேளாண்மை விரிவாக்க மைய அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அலுவலகத்திற்கு வரும் ஊழியர்களும், இந்த பஸ் ஸ்டாப்பில் இறங்கி செல்ல வேண்டி உள்ளது.
இங்கு இருந்த நிழற்குடை சேதம் அடைந்ததால் இடித்து அகற்றப்பட்டது. அதன்பிறகு பஸ் ஸ்டாப்பில் புதிய நிழற்குடை அமைக்கவில்லை. மழை,் வெயிலில் காத்திருந்த பயணிகள் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இந்திரா நகர் பஸ் ஸ்டாப்பில் நிழற்குடை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.