Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/70 இடங்களில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு

70 இடங்களில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு

70 இடங்களில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு

70 இடங்களில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு

ADDED : ஜன 29, 2024 05:24 AM


Google News
திருப்புல்லாணி: -தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில் ராமநாதபுரம் மாவட்டத்தில் 70 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. விவசாயிகள் நெல்லை விற்று பயன்பெறலாம்.

திருப்புல்லாணி வட்டாரத்தில் திருப்புல்லாணி, களரி, நல்லாங்குடி, மல்லல் ஆகிய இடங்களிலும், மண்டபம் வட்டாரத்தில் இரட்டையூரணி கிராமத்திலும் நேரடி கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.

திருப்புல்லாணி வேளாண்மை உதவி இயக்குனர் அமர்லால் கூறியதாவது; விவசாயிகள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்கலாம். கிலோவுக்கு சன்ன ரகத்திற்கு (ஏ) கிரேட் ரூ.23.10 பைசா மற்றும் சன்ன சரகம் (சி) கிரேட் ரூ.22.65 பைசா வழங்கப்படுகிறது. ஆதார் அட்டை நகல், வி.ஏ.ஓ., வழங்கிய அடங்கல், வங்கி கணக்கு எண் முதல் பக்க நகல் ஆகியவற்றை வழங்கிடலாம் என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us