ADDED : மே 23, 2025 11:34 PM
கமுதி: கமுதி அருகே முத்துமாரியம்மன் நகரை சேர்ந்த முனியசாமி மனைவி வழிவிட்டாள் 62, இவரது மகன் மணிகண்டனுக்கு திருமணம் முடிந்து வாழ்ந்து வந்த நிலையில் ஓராண்டுக்கு முன் தகராறு ஏற்பட்டுள்ளது. மகனும் மருமகளும் பிரிந்து வாழ்ந்து வருவதால் மூதாட்டி வழிவிட்டாள் மனமுடைந்தார்.
இந்நிலையில் கமுதி அருப்புக்கோட்டை ரோடு சேதுராஜபுரம் விலக்கு பாலம் அருகே சீமைகருவேலம் மரத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்தார். கமுதி போலீசார் விசாரிக்கின்றனர்.