ADDED : மார் 23, 2025 03:43 AM
திருவாடானை : திருவாடானை அரசு கலைக்கல்லுாரி சார்பில் திருவாடானை அருகே உள்ள டி.கிளியூர் கிராமத்தில் மார்ச் 10 முதல் 16 வரை 7 நாட்கள்என்.எஸ்.எஸ்., திட்ட முகாம் நடந்தது.
கிராமத்தை சுத்தம் செய்தல், மருத்துவ முகாம், ஊருணி சுத்தம் செய்தல் மற்றும் சைபர் குற்றங்கள் விழிப்புணர்வு, கிராமங்களுக்கு என்ன தேவை என்பது போன்ற நிகழ்ச்சிகள் நடந்தது. முதல்வர் பழனியப்பன் தலைமை வகித்தார். திட்ட அலுவலர் மணிமேகலை வரவேற்றார். திருவாடானை நீதிபதி மனிஷ்குமார், கோடனுார் ஊராட்சி தலைவர் காந்தி பங்கேற்றனர்.