ADDED : செப் 17, 2025 03:45 AM

முதுகுளத்துார் : முதுகுளத்துார் அருகே பெரிய இலை கிராமத்தில் தர்ம முனிஸ்வரர் கோயில் பொங்கல்விழா, விளக்கு பூஜை விழாவை முன்னிட்டு 3ம் ஆண்டு வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடந்தது.போட்டியில் மதுரை, விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 15 காளைகள், 150க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர்.
ஒவ்வொரு காளையை அடக்க 20 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டு 9 வீரர்கள் அடங்கிய மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். இதில் வெற்றி பெற்ற காளைகள், வீரர்களுக்கு குத்துவிளக்கு, ரொக்க பணம் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டது. ஒருசில மாடுபிடி வீரர்கள் காயம் அடைந்தனர். விழாவில் முதுகுளத்துார் அதனை சுற்றியுள்ள பகுதியிலிருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.ஏற்பாடுகளை பெரியஇலை கிராம மக்கள் செய்தனர்.