Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ அவலம் : மினி 'பார்' ஆகும் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம்: போலீசாரின் கண்காணிப்பின்றி குடிமகன்கள் ஆட்டம்

அவலம் : மினி 'பார்' ஆகும் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம்: போலீசாரின் கண்காணிப்பின்றி குடிமகன்கள் ஆட்டம்

அவலம் : மினி 'பார்' ஆகும் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம்: போலீசாரின் கண்காணிப்பின்றி குடிமகன்கள் ஆட்டம்

அவலம் : மினி 'பார்' ஆகும் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம்: போலீசாரின் கண்காணிப்பின்றி குடிமகன்கள் ஆட்டம்

ADDED : ஜூன் 17, 2025 11:14 PM


Google News
Latest Tamil News
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் போதிய கண்காணிப்பு இல்லாததால் சிலர் மது, கஞ்சா உள்ளிட்ட போதை வஸ்துகளை அருந்துகின்றனர். இதனால் அலுவலர்கள் குறிப்பாக பெண் அலுவலர்கள் பணிமுடிந்து இரவு நேரத்தில் அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை உள்ளது. பல இடங்கள் 'மினி பார்' ஆக மாறியதால் குடிமகன்கள் ஆட்டம் போடுகின்றனர். எனவே போலீசார் கண்காணித்து மது அருந்தும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பட்டணம்காத்தான் ஊராட்சி சேதுபதிநகரில் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் அமைந்துள்ளது. புதிய, பழைய, கலெக்டர் அலுவலக வளாக கட்டடத்தில் கலெக்டர் அலுவலகம், டி.ஆர்.ஓ., கூடுதல் கலெக்டர், துணை கலெக்டர்கள், தேர்தல் பிரிவு, மக்கள் தொடர்பு மையம், மூன்று மாவட்டங்களுக்குரிய ஆவண ஆய்வுக்குழு அலுவலகம் என பல்வேறுதுறை அலுவலகங்கள் உள்ளன.

இங்கு 300க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரிகின்றனர். தினமும் ஏராளமான வெளியூர் பணியாளர்கள், பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் அம்மா பூங்கா அருகே பயன்பாடில்லாத கட்டடம், கலெக்டர் அலுவலக வளாகத்தில் மீன்வளத்துறை அலுவலக ரோடு, மருத்துவக்கல்லுாரி ரோடு, மாற்றுத்திறனாளிகள் அலுவலக குறுக்கு ரோடு, விளையாட்டு மைதானத்திற்கு செல்லும் ரோடு, பழைய கலெக்டர் அலுவலகம் அருகே டிரைவர்கள் ஓய்வு எடுக்கும் பயன்பாடில்லாத கட்டடம் உள்ளிட்ட பகுதிகளில் சிலர் மது, கஞ்சா அருந்தும் இடமாக பயன்படுத்தி வருகின்றனர்.

மேற்கண்ட இடங்களில் மதுபாட்டிகள், பிளாஸ்டில் கப், பாட்டிகள் குப்பை குவிந்துள்ள நிலையில் குடித்து விட்டு கும்மாளமிடும் கும்பல் இப்பகுதிகளை 'மினி பார்' ஆகவே மாற்றி வருகின்றனர். இதனால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் பணி முடிந்து பெண்கள் இரவு 7:00 மணிக்கு மேல் நடந்து, டூவீலர்களில் செல்வதற்கு அச்சப்படுகின்றனர்.

எனவே இரவு நேரத்தில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் போலீசார் அடிக்கடி ரோந்து செல்ல வேண்டும், மேலும் காலியிடம், பயன்பாடில்லாத கட்டடங்களில் மது, கஞ்சா அருந்துபவர்களை கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இங்கு நுழைவு வாசலில் கேணிக்கரை போலீஸ் ஸ்டேஷனும், புதிய கலெக்டர் அலுவலகம் அருகில் எஸ்.பி., முகாம் அலுவலகம் இருந்தும் இந்த அவல நிலை உள்ளது. நடவடிக்கை எடுக்க எஸ்.பி., சந்தீஷ் போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.----





      Our Apps Available On




      Dinamalar

      Follow us