Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ ராமேஸ்வரம் மீனவர்கள் 30 பேருக்கு நவ.6 வரை சிறைக்காவல் நீட்டிப்பு

ராமேஸ்வரம் மீனவர்கள் 30 பேருக்கு நவ.6 வரை சிறைக்காவல் நீட்டிப்பு

ராமேஸ்வரம் மீனவர்கள் 30 பேருக்கு நவ.6 வரை சிறைக்காவல் நீட்டிப்பு

ராமேஸ்வரம் மீனவர்கள் 30 பேருக்கு நவ.6 வரை சிறைக்காவல் நீட்டிப்பு

ADDED : அக் 24, 2025 04:20 AM


Google News
ராமேஸ்வரம்: இலங்கை சிறையில் உள்ள ராமேஸ்வரம் மீனவர்கள் 30 பேருக்கு நவ., 6 வரை சிறை காவலை நீட்டித்து மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அக்.,8ல் ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்களின் 4 படகுகளை பறிமுதல் செய்து, அதில் இருந்த 30 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து வவுனியா சிறையில் அடைத்தனர். வாய்தா நாளான நேற்று மீனவர்களையும் மன்னார் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர்.

வழக்கை விசாரித்த நீதிபதி மீனவர்களை நவ., 6 வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். மீனவர்களை மீண்டும் போலீசார் சிறையில் அடைத்தனர். மீனவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என மீனவர் குடும்பத்தினர் எதிர்பார்த்த நிலையில் சிறைக் காவல் நீட்டிப்பு தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us