Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ஆபத்தான நிலையில் இரும்பு மின் கம்பம்

ஆபத்தான நிலையில் இரும்பு மின் கம்பம்

ஆபத்தான நிலையில் இரும்பு மின் கம்பம்

ஆபத்தான நிலையில் இரும்பு மின் கம்பம்

ADDED : ஜன 15, 2024 11:17 PM


Google News
Latest Tamil News
முதுகுளத்துார் : முதுகுளத்துார் கடலாடி முக்கு ரோட்டில் சாலையோரத்தில் இரும்பு மின்கம்பம் ஆபத்தான நிலையில் உள்ளது.

முதுகுளத்துார் துணை மின்நிலையத்தில் இருந்து பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு மின் சப்ளை செய்யப்படுகிறது. கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட மின் கம்பம் வழியாக மின் சப்ளை செய்யப்படுகிறது.

முதுகுளத்துாரில் இருந்து கடலாடி முக்கு ரோட்டில் சாயல்குடி அருப்புக்கோட்டை செல்லும் முக்கியமான சாலையாக உள்ளது.

இங்கு சாலையோரத்தில் இரும்பு மின்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டதால் தற்போது மின்கம்பம் சேதமடைந்து சாய்ந்துள்ள நிலையில் உள்ளது.

இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. சாயல்குடி, அருப்புக்கோட்டை செல்லும் முக்கியமான சாலை என்பதால் இவ்வழியே செல்லும்​வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்கின்றனர். அருகில் இருக்கும் குடியிருப்பு மக்களும் அச்சப்படுகின்றனர்.

எனவே ஆபத்தான நிலையில் உள்ள இரும்பு மின்கம்பத்தை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us