ADDED : மார் 20, 2025 06:57 AM

பரமக்குடி: பரமக்குடியில் 12 ஆண்டுகளுக்கு முன்பு படுகொலை செய்யப்பட்ட முன்னாள் கவுன்சிலர் பா.ஜ., நிர்வாகி முருகன் நினைவு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா அஞ்சலி செலுத்தினார்.
மாநில பொதுச்செயலாளர் பொன் பாலகணபதி, மாவட்ட தலைவர் முரளிதரன், நகர் தலைவர் ரவி, வக்கீல் சண்முகநாதன் மற்றும் பா.ஜ., ஹிந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ்., உள்ளிட்ட ஹிந்து அமைப்பினர் திரளாக கலந்து கொண்டனர்.