Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ ராமநாதபுரம் சந்தையில் ரூ.5 கோடிக்கு ஆடு விற்பனை

ராமநாதபுரம் சந்தையில் ரூ.5 கோடிக்கு ஆடு விற்பனை

ராமநாதபுரம் சந்தையில் ரூ.5 கோடிக்கு ஆடு விற்பனை

ராமநாதபுரம் சந்தையில் ரூ.5 கோடிக்கு ஆடு விற்பனை

ADDED : ஜூன் 05, 2025 12:58 AM


Google News
Latest Tamil News
ராமநாதபுரம்: பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ராமநாதபுரத்தில் நேற்று நடந்த சந்தையில் ரூ.5 கோடிக்கு ஆடுகள் விற்பனை நடைபெற்றதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

நாளை மறுநாள்(ஜூன் 7) பக்ரீத் பண்டிகை கொண்டாட இருப்பதை முன்னிட்டு ராமநாதபுரம் அருகே சக்கரகோட்டை கீழக்கரை ரோட்டில் நேற்று காலை 4:00 மணிக்கே சிறப்பு சந்தை துவங்கி மதியம் வரை நடந்தது. செம்மறி ஆடுகள், வெள்ளாடுகள் அதிகளவில் விற்பனைக்கு குவிந்தன.

மதுரை, சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் வியாபாரிகள் வந்திருந்தனர். ஒரு ஆடு ரூ.15 ஆயிரத்தில் இருந்து 23 ஆயிரம் வரை விற்கப்பட்டது. 10 கிலோ உள்ள ஆடு ரூ.8000 த்தில் இருந்து ரூ.10 ஆயிரம் வரை விற்றது. ரூ.5 கோடிக்கு மேல் வியாபாரம் நடந்துள்ளது.

பக்ரீத் பண்டிகை காரணமாக ஆடுகளின் விலை வழக்கத்தை விட ரூ.2000 முதல் ரூ.4000 வரை அதிகரித்துள்ளது என வியாபாரிகள் கூறினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us