ADDED : ஜூன் 07, 2025 12:13 AM
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே செட்டியமடை செல்வ விநாயகர், முத்து மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
முன்னதாக அனுக்ஞை, விநாயகர் பூஜை, வாஸ்து சாந்தி பூஜைகள் நடந்தன. பின்னர் முதல் மூன்று கால யாக சாலை பூஜைகள் நடைபெற்றுகோ பூஜை, மகா பூர்ணாஹூதி தீபாராதனை நடைபெற்றது.
தொடர்ந்து யாகசாலையில் பூஜை செய்யப்பட்ட புனித நீர் கோயில் கோபுரத்தில் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மூலவர்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு அபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவை முன்னிட்டு அன்னதானம் நடைபெற்றது.