/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ ராமேஸ்வரம் அருகே தடை செய்த இரட்டை மடியில் மீன் பிடிப்பு ராமேஸ்வரம் அருகே தடை செய்த இரட்டை மடியில் மீன் பிடிப்பு
ராமேஸ்வரம் அருகே தடை செய்த இரட்டை மடியில் மீன் பிடிப்பு
ராமேஸ்வரம் அருகே தடை செய்த இரட்டை மடியில் மீன் பிடிப்பு
ராமேஸ்வரம் அருகே தடை செய்த இரட்டை மடியில் மீன் பிடிப்பு
ADDED : செப் 03, 2025 01:06 AM

ராமேஸ்வரம்:ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே பாம்பன் கடலில் தடை செய்யப்பட்ட இரட்டை மடியில் மீன் பிடித்த நான்கு விசைப்படகுகளை மீன்வளத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
மீன் வளம், கடல் வளத்தை அழிக்கும் இரட்டை மடி, சுருக்குமடி, ரோலர் மடியில் மீன்பிடிக்க தமிழக அரசு தடை விதித்தது. ஆனால் ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் பகுதி விசைப்படகு, நாட்டுப்படகு மீனவர்கள் இரட்டைமடி, சுருக்கு மடியில் மீன்பிடிக்கின்றனர்.
நேற்று முன்தினம் மண்டபத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களில் ஆறுமுகம், கார்த்திக், சைக்கா ராணி, உமைதா பானு ஆகியோருக்கு சொந்தமான விசைப்படகுகளில் 24 மீனவர்கள் பாம்பன் வட கடலான பாக்ஜலசந்தி கடலில் மீன்பிடித்தனர். அவர்கள் இரு குழுவாக சேர்ந்து தடை செய்யப்பட்ட இரட்டை மடியில் மீன் பிடித்தனர். இதையறிந்த மீன்வளத்துறை உதவி இயக்குனர் தமிழ்மாறன், அதிகாரிகள் படகில் நடுக்கடலுக்கு சென்று 4 படகுகளையும் மடக்கி பிடித்தனர். பின் படகு உரிமையாளர்கள் மீது வழக்கு பதிந்து வலைகள், மீன்பிடி தளவாடப்பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.
இவ்வழக்கு முடியும் வரை இப்படகுகளுக்கு மீன்பிடிக்க அனுமதி டோக்கன், மானிய டீசல் ரத்து செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.