Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ராமநாதபுரத்தில் மீனவர் குறை தீர்க்கும் கூட்டம்

ராமநாதபுரத்தில் மீனவர் குறை தீர்க்கும் கூட்டம்

ராமநாதபுரத்தில் மீனவர் குறை தீர்க்கும் கூட்டம்

ராமநாதபுரத்தில் மீனவர் குறை தீர்க்கும் கூட்டம்

ADDED : ஜன 06, 2024 05:39 AM


Google News
ராமநாதபுரம்: -ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கத்தில் மீனவர்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கலெக்டர் விஷ்ணுசந்திரன் தலைமையில் அனைத்துத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

கடந்த காலங்களில் மீனவர்கள் வழங்கிய மனுக்கள் மீதான நடவடிக்கை, நிலுவையில் உள்ள மனுக்களின் நிலை குறித்து அலுவலர்கள் தெரிவித்தனர். தடைக்கால நிவாரணம், கல்வி உதவித்தொகை, துாண்டில் வளைவு, அனுமதியில்லாமல்இயங்கும் படகுகள் மீது நடவடிக்கை எடுத்தல், மானிய விலையில் டீசல் வழங்க கோருதல் உள்ளிட்ட கோரிக்கைகள் மீனவர்கள் தரப்பில் விடுக்கப்பட்டன.

மீனவர்களின் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் கலெக்டர் விஷ்ணுசந்திரன் உத்தரவிட்டார். கூட்டத்தில் மீன் வளத்துறை துணை இயக்குநர் பிரபாவதி, உதவி இயக்குநர்கள் ஜெயக்குமார், கோபிநாத், சிவக்குமார், மீனவ சங்க பிரதிநிதிகள் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us