/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ காரல் மீன்கள் அதிகம் சிக்கின மீனவர்கள் மகிழ்ச்சி காரல் மீன்கள் அதிகம் சிக்கின மீனவர்கள் மகிழ்ச்சி
காரல் மீன்கள் அதிகம் சிக்கின மீனவர்கள் மகிழ்ச்சி
காரல் மீன்கள் அதிகம் சிக்கின மீனவர்கள் மகிழ்ச்சி
காரல் மீன்கள் அதிகம் சிக்கின மீனவர்கள் மகிழ்ச்சி
ADDED : செப் 15, 2025 02:05 AM

ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் மீனவர்கள் வலையில் கோழி தீவனமாகும் காரல் மீன்கள் அதிகமாக சிக்கியதால் மகிழ்ச்சி அடைந்தனர்.
ராமேஸ்வரத்தில் இருந்து செப்., 13ல், 318 விசைப்படகில் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் நேற்று இந்திய- இலங்கை எல்லையில் மீன்பிடித்து விட்டு கரை திரும்பினர். இதில் பெரும்பாலான படகில் காரல் மீன்கள் ஏராளமாக சிக்கியது. இதனை கிலோ ரூ. 14க்கு வியாபாரிகள் வாங்கி லாரி மூலம் துாத்துக்குடி, கன்னியா குமரி மீன்அரவை ஆலைக்கு அனுப்பினர்.
நேற்று இலங்கை கடற்படையின் தொந்தரவு அதிகம் இல்லாததால், காரல் மீன்கள் அதிகம் சிக்கியதாகவும், இதனால் நஷ்டம் இன்றி கரை திரும்பியதாக மீனவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். இந்த மீன்களை ஆலையில் அரைத்து பவுடராக்கி நாமக்கல், கருரில் உள்ள கோழிப்பண்ணைக்கு தீவனமாக அனுப்பி வைக்கப்படும்.