Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ மழை, நோய் பாதித்து  அழிந்த மிளகாய்க்கு நிவாரணம் வழங்க  விவசாயிகள் கோரிக்கை

மழை, நோய் பாதித்து  அழிந்த மிளகாய்க்கு நிவாரணம் வழங்க  விவசாயிகள் கோரிக்கை

மழை, நோய் பாதித்து  அழிந்த மிளகாய்க்கு நிவாரணம் வழங்க  விவசாயிகள் கோரிக்கை

மழை, நோய் பாதித்து  அழிந்த மிளகாய்க்கு நிவாரணம் வழங்க  விவசாயிகள் கோரிக்கை

ADDED : செப் 18, 2025 10:52 PM


Google News
Latest Tamil News
ராமநாதபுரம்; ராமநாதபுரம் மாவட்ட தமிழ்நாடு வைகை விவசாயிகள் சங்கம் சார்பில் மிளகாய் விவசாயிகளுக்கு நிவாரணம், காப்பீட்டு தொகை வழங்க வலி யுறுத்தி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

சங்கத்தின் நிறுவனத்தலைவர் பாக்கியநாதன் தலைமையில் கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோனி டம் விவசாயிகள் மனு அளித்தனர். இதில் 2024-25ல் 16,500 எக்டேரில் மிளகாய் சாகுபடி நடந்தது. தொடர் மழை, பல்வேறு நோய் தாக்குதல் காரணமாக மிளகாய் அழுகி விவசாயிகளுக்கு ரூ.பல ஆயிரம் இழப்பு ஏற்பட்டு உள்ளது.

தோட்டக்கலை, புள்ளியியல் துறை உள்ளிட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். கணக்கெடுத்து ஓராண்டாகியும் மழை நிவாரணம், பயிர் காப்பீட்டு தொகை இதுவரை வழங்கவில்லை. இனியும் தாமதம் செய்யாமல் உடனடியாக மழை நிவாரணம், நுாறு சதவீதம் காப்பீட்டு தொகை வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us