/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/உடலுக்கு உடற்பயிற்சி... மனதுக்கு பயிற்சி புத்தக வாசிப்புஉடலுக்கு உடற்பயிற்சி... மனதுக்கு பயிற்சி புத்தக வாசிப்பு
உடலுக்கு உடற்பயிற்சி... மனதுக்கு பயிற்சி புத்தக வாசிப்பு
உடலுக்கு உடற்பயிற்சி... மனதுக்கு பயிற்சி புத்தக வாசிப்பு
உடலுக்கு உடற்பயிற்சி... மனதுக்கு பயிற்சி புத்தக வாசிப்பு
ADDED : பிப் 05, 2024 11:29 PM

ராமநாதபுரம் -உடலுக்கு எப்படி உடற்பயிற்சி தேவையோ அதே போல மனதுக்கு பயிற்சி புத்தக வாசிப்பு என்றார் சிக்மண்ட் ப்ராய்ட். நான் வாசிக்காத நல்ல புத்தகம் ஒன்றை வாங்கி வந்து என்னை சந்திப்பவனே தலைசிறந்த நண்பன் என்றார் ஆபிரகாம் லிங்கன்.
புத்தகம் வாசிப்பின் முக்கியத்துவம் அறிந்த அரசு மாவட்டங்களில் ஆண்டுதோறும் புத்தகக் கண்காட்சி நடத்தி வருகிறது.
ராமநாதபுரத்தில் மாவட்ட நிர்வாகம், தமிழ் இலக்கிய ஆர்வலர்களும் இணைந்து 6வது ஆண்டாக புத்தக கண்காட்சியை ராஜா மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் பிப்.2 முதல் 12 வரை காலை 9:00 முதல் இரவு 9:00 மணி வரை நடத்துகின்றனர்.
மூலிகை கண்காட்சி
புத்தக கண்காட்சியில் இந்திய மருத்துவம் மற்றும் ேஹாமியோபதி, இயற்கை மருத்துவம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள மூலிகை செடிகள் கண்காட்சி இடம் பெற்றுள்ளது. இதில் 250 வகையான அரிய மூலிகைகள் அவற்றின் பெயர், குணப்படுத்தும் நோய் விவரங்களை மூலிகை செடியின் கீழ் எழுதி உள்ளனர். சித்த மருத்துவ தாது மருந்து சரக்குகள், ஜீவ மருந்து பொருட்களும் இடம் பெற்றுள்ளன.
மேலும் 50 அழியும் நிலையில் உள்ள மூலிககைளை நோய்களுக்கு தக்கவாறு பிரித்து மக்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. சித்த மருத்துவ மாவட்ட அலுவலர் கீதா, ஒருங்கிணைப்பாளர் புகழேந்தி, ஸ்ரீமுகநாகலிங்கம் ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.