Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ராமேஸ்வரம் கோயிலில் ரூ.1.51 கோடி காணிக்கை

ராமேஸ்வரம் கோயிலில் ரூ.1.51 கோடி காணிக்கை

ராமேஸ்வரம் கோயிலில் ரூ.1.51 கோடி காணிக்கை

ராமேஸ்வரம் கோயிலில் ரூ.1.51 கோடி காணிக்கை

ADDED : ஜன 06, 2024 12:16 AM


Google News
Latest Tamil News
ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கையாக ரூ.1.51 கோடி கிடைத்தது.

ராமேஸ்வரம் கோயிலில் 30 நாட்களுக்கு பின் நேற்று சுவாமி, அம்மன் மற்றும் பஞ்சமூர்த்திகள் சன்னதிகள் முன்புள்ள உண்டியல்கள் இணை ஆணையர் சிவராம்குமார் முன்னிலையில் திறக்கப்பட்டு காணிக்கைகளை ஊழியர்கள் சேகரித்தனர். பின்னர் இவை கோயில் கல்யாண மண்டபத்தில் எண்ணப்பட்டது.

இதில் ரொக்கம் ரூ.1 கோடியே 51 லட்சத்து 53 ஆயிரத்து 776 கிடைத்தது. மேலும் தங்கம் 101 கிராம், வெள்ளி 6 கிலோ 630 கிராம் காணிக்கையாக கிடைத்தது. இப்பணியில் துணை ஆணையர் பாஸ்கரன், மேலாளர் மாரியப்பன், கண்காணிப்பாளர் பாலசுப்பிரமணியன், பேஸ்கார்கள் கமலநாதன், ஊழியர்கள் ஈடுபட்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us