Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/பழநிக்கு காவடியுடன் பக்தர்கள் பாதயாத்திரை

பழநிக்கு காவடியுடன் பக்தர்கள் பாதயாத்திரை

பழநிக்கு காவடியுடன் பக்தர்கள் பாதயாத்திரை

பழநிக்கு காவடியுடன் பக்தர்கள் பாதயாத்திரை

ADDED : ஜன 19, 2024 04:44 AM


Google News
முதுகுளத்துார்: முதுகுளத்துார், மு.துாரி, கிடாத்திருக்கை, இளஞ்செம்பூர், ஏனாதி, வெண்ணீர்வாய்க்கால், காக்கூர், பூக்குளம் உட்பட பல்வேறு கிராமங்களில் இருந்து 300க்கும் மேற்பட்ட பழநி பாதயாத்திரை பக்தர்கள் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மாலை அணிந்து விரதம் இருந்து வந்தனர்.

முதுகுளத்துார் சரவணா பழநி பாதயாத்திரை குழு சார்பில் முதுகுளத்துார் வழிவிடு முருகன் கோயிலில் இருந்து காவடி எடுத்து 300க்கும் மேற்பட்ட பக்தர்கள் செல்வி அம்மன் கோயில், முருகன் கோயில், பத்ரகாளியம்மன் கோயில் உட்பட முக்கிய விதிகளில் ஊர்வலமாக சென்று வழிபட்டனர்.

பின்பு முதுகுளத்துாரில் இருந்து பழநிக்கு பாதயாத்திரையாக காவடியுடன் புறப்பட்டனர். முன்னதாக முதுகுளத்துார் வழிவிடு முருகன் கோயிலில் மூலவரான முருகனுக்கு பால், சந்தனம், பன்னீர் உட்பட 16 வகை அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடந்தது.

ஏற்பாடுகளை சரவணா பழநி பாதயாத்திரை குழுவினர் செய்தனர். பாத யாத்திரை செல்லும் வழிகளில் பொதுமக்கள் பாதபூஜை செய்து பக்தர்களை வழி அனுப்பி வைத்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us