Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ 12 நாட்டு படகுகளுக்கு ஆவணம் இல்லை அரசு வழங்கும் உதவியை நிறுத்த முடிவு

12 நாட்டு படகுகளுக்கு ஆவணம் இல்லை அரசு வழங்கும் உதவியை நிறுத்த முடிவு

12 நாட்டு படகுகளுக்கு ஆவணம் இல்லை அரசு வழங்கும் உதவியை நிறுத்த முடிவு

12 நாட்டு படகுகளுக்கு ஆவணம் இல்லை அரசு வழங்கும் உதவியை நிறுத்த முடிவு

ADDED : ஜூன் 05, 2025 01:04 AM


Google News
தொண்டி: தேவிபட்டினம், தொண்டி கடற்கரை பகுதியில் விசைப்படகு, நாட்டுப்படகுகள் ஆய்வு செய்யும் பணியின் போது ஆவணங்கள் இல்லாததால் 12 நாட்டுப்படகுகளுக்கு அரசு வழங்கும் உதவியை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

கடல் மீன்வளத்தை பாதுகாக்கும் வகையில் ஏப்.,15 முதல் ஜூன் 14 வரை மீன்பிடிக்க தடைகாலம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் விசைப்படகுகளை கரையில் நிறுத்தி பராமரிப்பு பணிகளை மேற்கொண்டுள்ளனர். ஆண்டு தோறும் மீன்பிடி தடை காலத்தின் போது விசைப்படகு மற்றும் நாட்டுப்படகுகளை ஆய்வு செய்வது வழக்கம்.

எஸ்.பி.பட்டினம் முதல் தேவிபட்டினம் ஆற்றங்கரை வரை 78 விசைப்படகுகளும், 3200 நாட்டுப்படகுகளும் உள்ளன. இந்நிலையில் ஜூன் 2ல் விசைப்படகுகளும், மறுநாள் நாட்டுப்படகுகள் ஆய்வு செய்யும் பணிகள் நடந்தது. மீன்வளத்துறை அலுவலர்கள் மற்றும் மரைன் போலீசார் இப்பணியில் ஈடுபட்டனர். படகு சான்றிதழ், படகின் நிலை மற்றும் தரத்தை உறுதிபடுத்துதல் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டது. இதில் 12 நாட்டுப்படகுகளுக்கு ஆவணங்கள் இல்லை.

எனவே அந்த படகுகளின் உரிமையாளர்களுக்கு அரசால் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகளை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக அலுவலர்கள் தெரிவித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us