Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ பாண்டியன் நகரில் சேதமடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி

பாண்டியன் நகரில் சேதமடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி

பாண்டியன் நகரில் சேதமடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி

பாண்டியன் நகரில் சேதமடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி

ADDED : ஜூன் 05, 2025 12:56 AM


Google News
Latest Tamil News
ரெகுநாதபுரம்: ரெகுநாதபுரம் ஊராட்சி பாண்டியன் நகரில் சேதமடைந்த நிலையில் மேல்நிலை நீர்த் தேக்க தொட்டி உள்ளது. 2011ல் கட்டப்பட்ட 2 லட்சம் லி., மேல்நிலை நீர்த் தொட்டியின் தாங்கும் திறன் கொண்ட நான்கு அடி பகுதி துாண்களிலும் சிமென்ட் பூச்சுக்கள் உதிர்ந்து கான்கிரீட் கம்பிகள் வெளியே தெரிகிறது.

பாண்டியன் நகர் பகுதி மக்கள் கூறியதாவது:

சேதமடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் அருகே கலையரங்கம், விநாயகர் கோயில் மற்றும் பயணியர் நிழற்குடை உள்ளன. மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் நான்கு தாங்கும் திறன் கொண்ட துாண்கள் சேதமடைந்துள்ளதால் விபத்து அபாயம் நிலவுகிறது.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு மாற்று ஏற்பாடாக புதிய மேல்நிலை நீர்த் தேக்க தொட்டி ரெகுநாதபுரம் ஊராட்சி நிர்வாகம் சார்பில் கட்டப்பட்டுள்ளது.

எனவே விபத்திற்கு வழியாகும் நிலையில் உள்ள பாண்டியன் நகர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை இடித்து அப்புறப்படுத்த திருப்புல்லாணி யூனியன் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us