Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/மேலிட ஒருங்கிணைப்பாளர் முன் காங்கிரஸ் கட்சியினர் மோதல்

மேலிட ஒருங்கிணைப்பாளர் முன் காங்கிரஸ் கட்சியினர் மோதல்

மேலிட ஒருங்கிணைப்பாளர் முன் காங்கிரஸ் கட்சியினர் மோதல்

மேலிட ஒருங்கிணைப்பாளர் முன் காங்கிரஸ் கட்சியினர் மோதல்

ADDED : ஜன 31, 2024 01:37 AM


Google News
Latest Tamil News
ராமநாதபுரம்:ராமநாதபுரத்தில் நடந்த காங்கிரஸ் கட்சியின் ஆலோசனைக் கூட்டத்தில் மேலிட ஒருங்கிணைப்பாளர் சொர்ண.சேதுராமன் முன்னிலையில் கட்சியினர் ஒருவருக்கொருவர் வாக்குவாதம் செய்து தகராறில் ஈடுபட்டனர்.

காங்கிரஸ் கட்சி சார்பில், லோக்சபா தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் ராமநாதபுரத்தில் நடந்தது. மாவட்ட பொறுப்புக்குழு தலைவர் பாண்டி தலைமை வகித்தார்.

முன்னாள் மாவட்டத் தலைவர் செல்லத்துரை அப்துல்லா பேசுகையில், ''உட்கட்சி பூசல், அரசியல் காழ்ப்புணர்ச்சியால் பதவியை ராஜினாமா செய்தேன். இங்கு உழைப்பவருக்கு மதிப்பில்லை,'' என்றார்.

தொண்டர்கள் பலர் அவருக்கு ஆதரவாக குரல் எழுப்பினர். சிலர் எதிர்ப்புக் குரல் எழுப்பினர். கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. மேலிட ஒருங்கிணைப்பாளர் சொர்ண.சேதுராமன் சமாதானப்படுத்தினார்.

பொறுப்புக்குழு உறுப்பினர் கோட்டைமுத்து கட்சியில் நடந்த கசப்புணர்வுகளை பட்டியலிட்டார்.

தொண்டர்கள் பிளக்ஸ் பேனரில் முன்னாள் முதல்வர் காமராஜர் படம் இல்லை என குரல் எழுப்பினர். இப்படி தொடர்ந்து கூச்சல் குழப்பம் நிலவியது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us