ADDED : மே 13, 2025 01:04 AM
உத்தரகோசமங்கை : -உத்தரகோசமங்கை மங்களநாத சுவாமி சமேத மங்களேஸ்வரி அம்மன் கோயிலில் சித்திரை திருவிழா மே 2ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது.
10 நாள் நிறைவை முன்னிட்டு தேவேந்திரகுல வேளாளர் மண்டகப்படியில் ரிஷப வாகனங்களில் மங்களநாதர் மற்றும் மங்களேஸ்வரி அம்மன் உலா வந்தனர். இரவில் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் நடந்தது. ஏற்பாடுகளை 101 கிராம தேவேந்திரகுல வேளாளர் மகாசபையினர் செய்தனர்.