ADDED : ஜன 28, 2024 04:50 AM
முதுகுளத்துார், : -கமுதி அருகே வல்லந்தை கிராமத்தைச் சேர்ந்தவர் அருள்பாண்டி 23. முதுகுளத்துாரில் டூவீலர் மெக்கானிக் கடை நடத்தி வருகிறார்.
முதுகுளத்துார்- -அபிராமம் சாலை செல்வநாயகபுரம் பஸ் ஸ்டாப் அருகே டூவீலரில் சென்றார்.
அப்போது பின்னால் டூவீலரில் வந்த அடையாளம் தெரியாத 2 பேர் வழிமறித்தனர். அருள்பாண்டி வைத்திருந்த ரூ.10,100 பணம், அலைபேசி ஆகியவற்றை பறித்துச் சென்றனர்.
முதுகுளத்துார் போலீசில் அளித்த புகாரில் எஸ்.ஐ., சரவணன் விசாரிக்கிறார்.