ADDED : மே 18, 2025 10:11 PM
திருவாடானை : திருவாடானை சிறுகம்பையூர் காமாட்சி அம்மன் கோயில் அருகே அரசு அனுமதி இல்லாமல் சவடு மண் திருடியதால் வருவாய்த்துறையினர் மற்றும் தொண்டி போலீசார் ஆய்வு செய்தனர்.
அப்போது டிராக்டரில் மணல் திருடுவது தெரிந்தது. மணல் அள்ளும் இயந்திரம், இரண்டு டிராக்டர், இரண்டு டூவீலர்களை கைப்பற்றினர். போலீசை பார்த்ததும் தப்பி ஓடிய பழனி, இந்திரா, முருகன் ஆகியோரை தேடிவருகின்றனர்.


