Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ மாட்டுவண்டி பந்தயம்

மாட்டுவண்டி பந்தயம்

மாட்டுவண்டி பந்தயம்

மாட்டுவண்டி பந்தயம்

ADDED : செப் 05, 2025 11:23 PM


Google News
Latest Tamil News
முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே நல்லுார் கிராமத்தில் பேச்சி அம்மன்,அய்யனார் கோயில் குதிரை எடுப்பு விழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.

சின்ன மாடு, பெரிய மாடு என 2 பிரிவுகளாக போட்டிகள் நடந்தது. இதில் ராமநாதபுரம், துாத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர், சிவகங்கை, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 21 இரட்டை மாட்டு வண்டிகள் மற்றும் பந்தய வீரர்கள் கலந்து கொண்டனர்.

முதல் நான்கு இடங்களை பெற்றவர்களுக்கு ரொக்கப் பணம், குத்து விளக்கு, நினைவு பரிசுகள் வழங்கப் பட்டது. சிறிய மாட்டு வண்டி பந்தயத்தின் போது ஒரு வண்டியின் சக்கரம் கழன்று ஒரு சக்கரத்துடன் எல்லை கோட்டை கடந்து நான்காம் பரிசு பெற்றது.

பொதுமக்கள் ரோட்டின் இருபுறங்களிலும் நின்று மாட்டு வண்டி பந்தயத்தை கண்டு ரசித்தனர். ஏற்பாடுகளை நல்லுார் கிராம மக்கள் செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us