ADDED : பிப் 24, 2024 05:50 AM
கமுதி : கமுதி அரசு மருத்துவமனை, பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் நினைவு கல்லுாரி, பேரையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இணைந்து ரத்ததான முகாம் நடந்தது. தலைமை டாக்டர் விஜயா தலைமை வகித்தார். முதல்வர் தர்மர், டாக்டர் ராஜா முன்னிலை வகித்தனர். 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் ரத்தம் வழங்கினர். முகாமில் பெறப்பட்ட ரத்தத்தை ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை ரத்த வங்கிக்கு கொண்டு செல்லப்பட்டது.
கல்லுாரி பேராசிரியர்கள் ஆதிமூலம், ஜெயகாளை பங்கேற்றனர்.