ADDED : ஜன 30, 2024 12:02 AM

திருவாடானை, - திருவாடானை அருகே புதுக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த சேகர் என்பவரின் இடத்தில் 100 ஆண்டுகள் ஆன பழமையான ஆலமரம் உள்ளது.
ஆலமரத்தின் அடியில் காய்ந்த இலைகள் குவியலாக கிடந்தது. அதில் யாரோ தீ வைத்தனர். அப்போது மரத்தில் தீ பரவியது. இது குறித்து சேகர் திருவாடானை தீயணைப்புதுறைக்கு தகவல் தெரிவித்தார். நிலைய அலுவலர் வீரபாண்டியன் தலமையிலான வீரர்கள் சென்று தீ அணைத்தனர்.


